சனி, 8 பிப்ரவரி, 2014

முத்து ?

வாஷிங்டன்: செவ்வாய்
கிரகத்தை ஆராய்ச்சி செய்து வரும்
நாசா விஞ்ஞானிகள், அங்கு முத்து போன்ற
வெள்ளை நிறத்தில் பூ போல
ஒரு பொருள்
இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்க
விண்வெளி ஆய்வு நிறுவனமான
நாசா,
செவ்வாய்
கிரகத்தை தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறது.
விஞ்ஞானிகள் அனுப்பிய
கியூரியாசிட்டி ஆய்வு கலம், செவ்வாயில்
தரையிறங்கி அங்குள்ள நில அமைப்புகளை படம்
பிடித்து அனுப்பி வருகிறது. அங்கு தண்ணீர்
உள்ளதா, மனிதன் வாழ
முடியுமா என்பதை கண்டுபிடிப்பதே நாசாவின்
நோக்கமாக உள்ளது. இந்நிலையில், கடந்த
மாதம் கியூரியாசிட்டி அனுப்பிய
புகைப்படங்களை நாசா விஞ்ஞானிகள்
ஆய்வு செய்த போது ஆச்சரியம் அடைந்தனர்.
முத்து போன்ற வெள்ளை நிறத்தில்
இதழ்களுடன் பூ போன்ற ஒரு பொருள்
செவ்வாய் கிரகத்தில் இருக்கும்
படத்தை கியூரியாசிட்டி அனுப்பி உள்ளது.
அதை பார்த்து விஞ்ஞானிகள் ஆச்சரியம்
அடைந்தனர்.
ஒரு பூவாக இல்லாமல்
கொத்தாக இருக்கிறது.
அதற்கு மார்ஷியன் பிளவர்
என்று பெயரிட்டுள்ளனர். மலை பாறையில்
துளிர்விடும் பூங்கொத்து போல்
அது காட்சி அளிக்கிறது. இந்த
படத்தை ஆன்லைனில் பார்த்த பலர்,
அது பளிங்கு கல்லாக இருக்கலாம், படிக
கல்லாக இருக்கலாம் என்று பல
கருத்துகளை கூறி வருகின்றனர். புதிதாக பூத்த
பூதான்
அது என்று அடித்து சொல்லியிருக்கிறார்
ஒருவர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நாசா செய்தித்
தொடர்பாளர் கைவெப்ஸ்டர்
கூறுகையில், இதே போன்ற ஒரு பொருள்
செவ்வாய் கிரகத்தில் இருப்பதை, கடந்த
ஆண்டு அக்டோபர் மாதம்
கியூரியாசிட்டி விண்கலம் படம்
பிடித்து அனுப்பியது. நாசா விஞ்ஞானிகள்
அந்த படத்தை தீவிரமாக ஆய்வு செய்த
போது, அது பிளாஸ்டிக் துண்டு என்பதையும்,
கியூரியாசிட்டி விண்கலத்தில்
இருந்து செவ்வாய் கிரகத்தில்
விழுந்துள்ளது என்பதையும் கண்டுபிடித்தனர்.
ஆனால், இப்போது வந்துள்ள படத்தில்
இருப்பது மலை பாறையின்
ஒரு பகுதி என்பது உறுதியாகி உள்ளது.
பூ போன்ற வடிவத்தில் இருப்பதால்,
செவ்வாயில்
பூ வளர்கிறது என்று சொல்ல
முடியாது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக